Saturday, October 18, 2008

கர்வம் ...


கர்வம் கொண்ட காதலுக்கு

சொல்லிவிடாதே ...

நம் சண்டைகள் எல்லாம்

செல்லமாகத்தான் என்று ...

தெரிந்துவிட்டால்

கொன்றுவிடும்

நம்
காதலை ...

- சிந்து ...

Friday, October 10, 2008

இசை ...


மௌனத்தின் ஓசை கூட


ராகம் பாடி இசைக்கிறது


தாளம் போடும்


உன் விழியுடன் சேர்ந்து ...


-சிந்து...

என்ன செய்வேன் ..?


என்


கண்ணாக நீ இருந்தால்


கண்ணீர் விட்டு கரைந்திருப்பேன் ...


இமையாக


நீ இருந்தால்


துடித்துக்கொண்டே இறந்திருப்பேன் ...


மனமாக இருக்காயடா


மௌனம் தவிர வேறென்ன செய்வேன் ...?!


- சிந்து...


காத்திருக்கிறேன் ...


நாணி தலை குனிந்து


நிலவொளியில் தன்னை மறந்து


கோலம் விரல் போட


தனிமையிலே நடந்து வந்தேன் ...


மனமோ


மல்லிகையாய்


மாலையிட காத்திருக்க ...


வரும் என் மன்னவனை


நித்திரையும் தேடுதடி ...


- சிந்து ...

Sunday, October 5, 2008








நட்பு என்னும் உறவில் கூட


காயங்கள் மாறி


தழும்புகள் மிஞ்சும் ...


ஆனால்


காதல் என்னும் உணர்வில்


தழும்புகள் ஏதடி


காயங்கள் ஆறாமல் ...?!
-சிந்து ...

Saturday, September 13, 2008

வலியும் ... வழியும் ...


காயப்படும் என்று தெரிந்தும்
காயப்படுத்தும் நண்பர்களுக்கு ...
மனதின் வலியை உணர்த்த
மௌனத்தின் வழியே சிறந்தது ...

- சிந்து ...

Monday, September 1, 2008

ஜெய் தம்பு ...








பஞ்சு மெத்தை மீதினிலே


பம்பரமாய் இருப்பவனே ...


துள்ளி விளையாடும் நேரத்திலே


தொட்டில் தேடும் மன்னவனே ...



கண்கள் இரண்டும் அழகாக


கர்வம் தீர்க்கும் விருந்தாக ...


உற்று பார்க்கும் பார்வையிலே


கவர்ந்து இழுத்து கொள்பவனே ...



ஓய்யாரமாய் தூளியிலே


அசைந்து கொண்டு நீ சிரிக்க ...


சலங்கை ஒலியும் சங்கீதமாய்


இசைக்க வைக்கும் மாயவனே ...



இறுக பிடிக்கும் உன் பிடியில்


உன் மெல்லிய மனம் புரிந்துவிடும் ...


விலகும் விருப்பம் என்றும் இல்லை


என் மனதையும் தந்தேன் சின்னவனே ...



சிந்து ...



Saturday, August 9, 2008

என் செல்ல குட்டி ...
















ரோஜா பூ இதழ்கலடி ...
பௌர்ணமியாய் கண்களடி ...
பிஞ்சு விரலால் நீ பிடிக்க
மனம்
மெல்லிசையாய் இசைக்குதடி ...

முட்டி போட பழகவில்லை ...
தத்தி தத்தி பேசவில்லை ...
தவழ நீயும் வேண்டாமடி
உன்
பவழ பாதம் நோகுமடி ...

பிஞ்சு பாதத்தில் நீ மிதிப்பாய் ...
பிரியமுடன் நீ சிரிப்பாய் ...
கோடி கண்கள் வேண்டுமடி
உன்
சிரிப்பும் எனக்கு சிறைதானடி ...

உற்சவத்தில் நீ இருக்க ...
உற்சாகத்தில் உன் மனம் சிரிக்க ...
தூக்கி வைத்து இருப்பேனடி
உனக்கு
தூளியாய் கைகள் மாறுமடி ...

பிஞ்சு குழந்தை சிணுங்கலெல்லாம் ...
பிணைந்து கிடக்கும் உறவிற்காக ...
யாருக்கு இங்கே தெரியுமடி
உன்
அழுகையில் அன்பு கூடுமடி ...

அழுகாமல் நீ இருந்தால் ...
அமைதியாக வீடிருந்தால் ...
தேவதை வீட்டினுள் இருக்குதென்று


அட


தெய்வத்திற்கு எப்படி தெரியுமடி ...?!




- சிந்து ...

Thursday, August 7, 2008

குட்டி குட்டி ...

























*** சண்டைகள் வேண்டுமடா நமக்குள் ...
ஒரு சின்ன சிணுங்களில்

நீ

சமாதானம் அடைவதை


ரசிக்க ...




*** கவிதையாக காதல் செய்ய



கவிஞன் ஆக வேண்டாம்



காதலனாகி பார் ...



உன்னவளின் கண்ப்பார்வை



உன்னை



கவிஞனாக்கி விடும் ...












*** உன்னை பற்றி



கவிதை எழுத யோசிக்கிறேன் ...



உன் பெயரை தவிர



வேறொன்றும் தோன்றவில்லை ...









*** கண் இரண்டில்




இமைகள் வேண்டாம்




கள்வனே ...




உன்னை




கண் சிமிட்டும் நொடியில் கூட




மறைக்க மறுக்கிறேன் ...







*** கவிதைகளில்




வாழ்க்கையை உணர்த்தலாம் ...




ஆனால்




என் வாழ்க்கையை கவிதையாக மாற்ற




உன்னால் மட்டுமே முடியும் ...







*** உன்னை பற்றி தெரிந்த எனக்கு




என்னை பற்றி தெரியவில்லையடா ...




உன் அளவிற்கு ...







*** நிலவாக நீ இருந்தால்




ஒரு நாளில் தேய்ந்திடுவாய் ...




கனவாக நீ இருந்தால்




காலை பொழுதில் கலைந்திடுவாய் ...




மறையாமல் பார்த்து கொள்கிறேன்




என் மனமாக நீ இருந்தால் ...







*** உதிரமாக உன்னை கொண்டு




உன் ஓட்டத்தினால் உயிர் கொள்வதை விட




இறந்து விடுவேனடா




ஓடி கலைத்த உதிரமெல்லாம்




உறைந்து போய் என்னுடன் சேர ...







- சிந்து ...

Tuesday, August 5, 2008

சிதறல்கள் ...














*** கண்கள் முழுதும் காதல் கொண்டு


கண் இமை மூடி மறைத்து வந்தேன் ...


கண்கள் திறந்து நானும் பார்த்தால்


கலங்கி நீயும் போவாயடா ...


காதல் என்னும் வார்த்தை கொண்டு


நீ காயப்படுத்திய தழும்புகள் கண்டு ...






*** உன் நினைவுகளால்


கண்ணீர் சிந்தும் என் கண்களுக்கு


மருந்தாக சில முத்தங்களை தா ...


கண்ணீரெல்லாம் உறைந்து போகட்டும்


காதலாக ...


- சிந்து ...










Tuesday, July 22, 2008

சிந்திய சிந்தனைகள் ...















*** நினைப்பதற்குள்


நெஞ்சம் பூக்கிறது ...


ரசிப்பதற்குள்


புன்னகை பூக்கிறது ...


கண்கள் நிறைந்து


வழிந்து ஓட


கண்ணே அறிந்தேன்


இதுதான்


காதல் பெருக்கெடுப்பா ... !












*** அழகாய் சிந்தும் மழை சாரலில்


விளையாட துடிக்கும் மனம்


அடைமழை வந்தால்


ஒதுங்கி நிற்கவே சொல்கிறது ...


அதுபோலத்தான் அன்பும்


அளவாக இருக்கும் வரை


அழகாக இருக்கும் ...!








*** கண் கொண்ட கருவறையில்


காதல் உன்னை சுமந்திருந்தேன் ...


நீ


கண்ணீராய் வெளியேற


இமை கொண்டு மறுத்திருந்தேன் ...


தடுத்த இமைகள் ...


துடித்து விலக ...


களைந்து போனாயோ , கருவிலே ...!








- சிந்து ...


Friday, July 18, 2008

சிறு சிறு முத்துக்கள் ...





















**நிகழ்வுகளில் காயப்படுத்தினாய் ....



நினைவுகள் ரணமாக சேர்ந்தது ...










** மரணம் கூட



ரணம் தான் என்று



தன்னை உணர்த்த மறக்கவில்லை ...



காதல் மட்டும் ஏன் மறந்தது ...?










**நேசித்த நாட்களோ



நினைவுகளாய் என் மனதில் ...



காயப்பட்ட நொடிகளோ



சுவடுகளாய் என் நெஞ்சில் ...



நினைவுகள் மறைய போவதும் இல்லை ...



சுவடுகள் அழிய போவதும் இல்லை ...



மகிழ்ச்சியுடன் கண்ணீரும் சிந்தியது என் மனம் ...!










**உறங்கும் வரை உன் நினைப்புதான் ...



ஆனால் உறங்கிய பின்



நீயும் இல்லை



அட , கனவும் இல்லை ...



விழித்த நொடியில் உன் நினைப்புதான் ...



என்னுள் சுகந்தமாய்



என்றும் நீயடா ...!









**காதலில் இருந்தால்



செலவிட கற்றுக்கொள்ளுங்கள் ...



காதலுடன் சேர்த்து கண்ணீரையும் ...!





-சிந்து...












Friday, June 13, 2008

என் சந்தோஷங்கள் ...












வானவில்லாய் தோன்றுகிறது


என் சந்தோஷங்கள் ...




நிறமுற்றது என்று நினைத்தீர்களா


இல்லை


தோன்றிய சில வினாடிகளில்


நிறத்தின் சுவடுகள் கூட இல்லாமல்


மறைக்கிறது ...




திகட்டும் அளவிற்கு பாசம் ...


திணறும் அளவிற்கு சந்தோஷம் ...


திரும்பும் இடமெல்லாம்


இறைந்து கிடக்கும் இன்பம் ...


அள்ளிக்கொள்ள கைகள் நீட்டினாள்


அனைத்தும்


காணாமல் போகிறது


கானல் நீராய் ...




கேட்காமல் வாங்கி கொடுத்த பொம்மைகள்


விளையாடுவதர்க்குள்


திரும்ப பறித்து கொண்ட போது


ஏமாந்து நிற்கும் குழந்தைகளின் கண்ணீர்


ஏக்கங்கள் நிறைந்திருக்கும் ...


என் கண்ணீர் கூட அப்படித்தான்


பொம்மையை இருக்கிறது பாசம் ...




சிறுபிள்ளையாய் இருந்தது முதல்


இன்றுவரை


பல முறை ஏமாந்து கொண்டிருக்கிறேன்


நொடியில் காணமல் போகும்


இந்த பாசத்தினால் ....



-சிந்து ...




















Wednesday, June 4, 2008

ஊட்டியில் என் விடுமுறை ....


ரம்மியமான இரவு ...

கோடையிலும் பனி சிந்தும் காலைப்பொழுது ...

வென்னிலவா அல்ல வெண்பனியா

தினம் தினம் குழப்பத்தில் இரவு மேகங்கள் ...

விடியலுக்கு கூட முகம் காட்ட தயங்கும் சூரியன் ...

இயற்கையான விஷயங்களை கூட

ரசிக்க வைக்கும் ஒரு சொர்க்கம் அது

ஊட்டி ...


காலைப்பனியில் கால் நடக்க

குழந்தையின் மென்மையை மனம் உணர்ந்தது ...

கம்பளியின் வெப்பத்தில் உடல் புதைந்திட

மனமோ

குளிர்சாரலில் தன்னை தொலைத்தது ...


சிந்தனைகள் ஏதும் இன்றி

பாரமில்லா மனதை சுமந்து

மதியின் கட்டளைக்கு உட்படாமல்

தன் விருப்பத்திற்கு நடந்தன கால்கள் ...


வியக்க வைக்கும் வண்ணங்களில்

எத்தனை எத்தனை பூக்கள் அங்கே ...!

பறிக்க மனம் இன்றி

கொடியிலேயே விட்டு வந்தேன்

ரசனைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ...


மூலிகைகளை மருந்துகளாக உட்கொண்டதுண்டு

ஆனால்

என்றேனும் சுவாசித்ததுண்டா ...?

மாலை காற்றில் மதி மயங்க

மூலிகை வாசத்தில் மனம் மயங்க

செயலற்ற உடலோ

புத்துணர்ச்சியில் மீண்டது ஒவ்வொரு நாளும் ...


தனிமையிலேயே ரசனைக்கு கோடி விருந்து

இதில்

மனம் நெருங்கியவர்கள்

இடமெங்கும் நிறைந்திருந்தாள் ...

பரவசங்கள் ஆயிரம்

மனதிற்குள் அலையடிக்கும் ...

அந்த அலைகளின் தீண்டலில்

லயித்து போயிருந்தேன்

மூன்று நாட்கள் ...


பாசமான சொந்தங்கள் ...

செல்லமான சண்டைகள் ...

சிறுபிள்ளையாய் மாறிய எங்களுக்குள்

சின்னஞ்சிறு போட்டிகள் ...

வலைவுற்ற வீதிகளில்

வலி அறியா சந்தோஷங்கள் ...

இவை அனைத்தும்

இவ்விடுமுறையில்

எனக்கு கிட்டிய இனிய நினைவுகள் ...


- சிந்து







Sunday, May 25, 2008

தங்க குட்டி லக்க்ஷிக்கு ...




பிறந்த உன்னை காண
பல தூரம் பயணம் செய்தேன்
கற்பனையில் உன்னை சுமந்தபடி ...

பட்டு போன்ற உன் மேனியை
தொட்டு ரசித்து கொண்டிருந்த தருணத்தில்
என் ஸ்பரிசத்தின் வாசத்தை
சுவாசமாய் உட்கொண்டாயோ தங்கமே ...

காரணமில்லா அழுகையையும்
என் கரம் பற்ற
அமைதிக்கொண்டாய் ...

அலைகள் போல நீ தவழ
உன்
புரியா மொழியையும்
மொழி பெயர்த்து இன்பம் கொண்டேன் ...

நீ தவழ்ந்ததை ரசித்தவள்
நீ நடந்ததை கண்டு
வியந்தே போனேன் ...

படிப்படியான வளர்ச்சிகள்
எல்லா குழந்தைகளுக்கும் நிகழ்வதுதான்
என்றாலும்
நீ தழைக்கும் ஒவ்வொரு அடியையும்
வியப்புடன் ரசித்தேன் கண்ணே ...

இன்று
சிறு பிள்ளையாய்
பள்ளி செல்லும் உன்னை பார்த்து
அழகாய் சிரிக்கிறாய் என்று
பல மணி நேரம் ரசிக்கும் என்னை
பைத்தியக்காரி என்பாயா
அல்ல
பாசக்காரி என்பாயா...?

லக்க்ஷி ...
பள்ளிக்காலம் விட்டு
பருவக்காலம் தொட்டாலும்
உன் சின்னஞ்சிறு அசைவுகளுக்கு
என்றும்
ஒரு ரசிகை நானடி ...

- சிந்து ...

Sunday, May 11, 2008

அம்மா ...


விசித்திரமானவள் நீ ...

உன்னை சித்திரமாய் வண்ணம் தீட்ட

வார்த்தைகளால் கோலமிடுகிறேன் ...

அழகாய்

நீ இருக்க ...

அமுதாய்

உன்

பேச்சு இனிக்க...

அன்பான கவனிப்பால்

உன் வசம் தான் ஆயிரம் பேர் ...

தென்றலை விட

மென்மையாய் நீ பேச

சிப்பியும் அறியா முத்தாய்

உனக்குள் என்னை தொலைத்தேன் ...

சுகங்களை நீக்கி

சுமைகளை தாங்கி

துயரங்கள் பல உன்னை வருடினாலும்

புயலுக்கு பின் மலர்ந்த பூப்போல்

புன்னகையுடன்

பூக்கிறாய்

ஒவ்வொரு விடியலிலும் ...

நிழல் என நீ இருக்க

இருள் என நினைத்து நான் விலக

சற்றும் சலிக்காமல்

நிழலாகவே இன்றும் என்னை தொடர்கிறாய் ...

ஆசையாய் அருகில் வந்து

பாசமாய் கட்டித்தழுவி

உன் மேல் முகம் புதைத்து

என் கண்கள் நீர் சிந்தாவிட்டாலும்

எனக்கென நீ கசிந்த துளிகளில்

உன்

பாசத்தின் விலையை

நான் அறிந்தேன் ...

அம்மா

கடல் போல நீ

உன் மேல்

கட்டு மரமாய்

பயமறியாமல்

பயணம் செய்கிறேன் ...

அன்பான தந்தையும்

பாசமான தம்பியும்

என்னைப்போல் உன்னில் இருக்க

சந்தோஷப்பயணம் செய்வாய்

வாழ்க்கை பாதையில் ...

உன் உணர்வுகளுக்கு பின்

என்றும்

நாங்கள் தொடர்வோம் ...

- சிந்து...

Tuesday, May 6, 2008

அப்பா...

அப்பா...

உன்னை நான் எதனுடன் ஒப்பிடுவது....

ஆயிரம் மலர்களுடனா...?

இல்லை

அழகான வானவில்லுடானா...?

மலர்களின் வாசத்தை விட

உன் பாசம் மனம் வீச...

வானவில்லின் வண்ணங்களை விட

உன் எண்ணம் நிறம் சூட்ட

அன்பான அப்பா என்று உன்னை சொல்ல

வார்த்தைகளை தேடி

இன்னும் அலைகிறேன்...

தோல் குடுக்கும் தோழனாய்

நீ இருக்க ,

உன் மேல் தலை சாயும் , ஒரு நொடியில்

நீ பாசத்துடன் தலை வருடும் சிறுபொழுதில்

என் மனம் சுமந்த குழபங்களை

உன்னிடம் நீ எடுத்துக்கொள்ள

நிம்மதியாய் உறங்கி போகிறேன்...

உன் பேச்சால்

பலரை

உன் வசம் நீ கொண்டிருந்தாலும்,

ஒரு பார்வையில்

என்னையும் அறியாமல்

உன்னிடம் தோர்ப்பவல்

நான் மட்டுமே....

அப்பா

ஆயிரம் சந்தோஷங்களை

பரிசாக தரும் உன்னை

கண்ணீர் சிந்தவைத்த சில பொழுதுகளுக்காக

இன்றும் வருந்துகிறேன்....

ஆசை மகளாய் எனை வளர்த்த நீ

ஆயிரம் இன்னல்கள் என்னால் அடைந்தாலும்

பாசத்துடன் இன்னும் எனை அணைக்கிறாய்...

உன்னை ஒவ்வொரு நொடியும் ரசித்து

உன்னால் என்றும் பெருமைப்படும்

உன் அன்பு மகளாய்

பல வருடங்கள் நான் இருக்க

கடவுளை வேண்டுகிறேன்....

- சிந்து...

Monday, May 5, 2008

அண்ணா...

இல்லை என்று நினைத்த

உறவின் உருவமாய் ...

சுகத்திலும் சோகத்திலும்

மறுக்க முடியா தோழனாய்....

கண்கள் குளமாக

சந்தோஷத்தில் மனம் நிறைய...

உறவின் உரிமையை உணரும் முன்னே

காரணமின்றி விட்டு சென்றான்...

கண்கள் மீண்டும் குளமாக

மனமோ உறவின் உணர்வை ஏங்க....

சிந்து...

Sunday, May 4, 2008

Life...


The frangnance of Love
From
The flower of Heart
Is
Just to Attract
Bees like Humans
To
Enjoy the honey like Life....

sindhu..

பெண் குழந்தை...

ப்ரம்மனின் வேலை அற்ற படைப்பு ...
பிறந்தவுடன் இறந்தது கல்லிப்பாலால்
பெண் குழந்தை...

சிந்து...

Love...


It's not "mind" but "thoughts"...
It's not "heart" but "feelings"...
It's not "words" but "silence"...
It's not "sorrow" but "pain"...
It's not "me" but "you"...
It's not "love" but "life"...

sindhu...

அப்பா அம்மாவிற்கு...




பிரிந்தால் புரியும் என்றார்கள்
அவர்கள் அன்பு...
அருகில் இருந்து பெற்ற அரவணைப்புகள்
விலங்காக தோன்ற
விடை பெற்று வெளியேறினேன்
சந்தோஷங்களுடன்...
மெல்ல புரிந்தது..,
நான் நினைத்து வந்த உலகம்
என் கண்ணீரை எதிர்பார்த்து இருந்ததென்று...
அழகாய் வடிவமைத்து..,
ஆசையாய் கையில் கொடுத்ததை..,
தெரிந்தே தவற விட்டு...,
இன்று புரிந்தபின் ஏங்குகிறேன்...
அம்மா வின் அன்பிற்காக...
அப்பா வின் பாசத்திற்காக...
விலங்குகளாக இருந்தாலும்
பூக்களாலயே இருந்தது...
வேலிகளாக இருந்தாலும்
என் விருப்பங்களை கொண்டே இருந்தது...
உடைத்து விட்டு வந்த விலங்குகள்
விருபங்களையும் கலைத்தெரிய...
வேலிகள் தாண்டி வந்து
வேதனையில் மனம் நிறைய...
சொல்ல வார்த்தைகள் இன்றி
கண்ணீருடன் எழுதுகிறேன்...,
நான் பிரிந்து தவிக்கும்
என் அப்பா அம்மா விற்கு....

- சிந்து...

நட்பு...

உன் அன்பை நான் கேட்டு...
என் மனதின் பதில் கேக்க...
மௌனமாய் நின்ற ஒரு நொடியில்...,
மெல்ல சிரித்து , குரல் கொடுத்தாய்...,
உனக்கு முன் ,
உன் மனம்
என்னிடம் வந்ததென்று...

சிந்து...

தோழிக்கு ...



எனக்கு முன் உன்னை படைத்தவன்...
உனக்கு துணையாய் என்னை படைத்தான்....
நம்மை இணைக்க நட்பை உருவாக்கி...
அறிமுகமாக ஒரு நொடியும் கணித்தான்...
சந்தித்த ஒரு நொடியில்
பல உறவுகளை மனம் அது உணர்த்த...
நம் நட்பின் ஆழம் சொல்ல
மொழி ஏதும் இல்லாமல்,
மௌனமாய் சிரித்தான்
பூஜை அறையில்...

சிந்து...

Saturday, May 3, 2008

To my Friend..


A love for "U"
is
A rose among lilies....
Waiting for "U"
is
A bud among roses...
Missing "U"
is
A thorn among buds...
But
Losing "U"
is
My heart among thorns...

sindhu...