Tuesday, May 6, 2008

அப்பா...

அப்பா...

உன்னை நான் எதனுடன் ஒப்பிடுவது....

ஆயிரம் மலர்களுடனா...?

இல்லை

அழகான வானவில்லுடானா...?

மலர்களின் வாசத்தை விட

உன் பாசம் மனம் வீச...

வானவில்லின் வண்ணங்களை விட

உன் எண்ணம் நிறம் சூட்ட

அன்பான அப்பா என்று உன்னை சொல்ல

வார்த்தைகளை தேடி

இன்னும் அலைகிறேன்...

தோல் குடுக்கும் தோழனாய்

நீ இருக்க ,

உன் மேல் தலை சாயும் , ஒரு நொடியில்

நீ பாசத்துடன் தலை வருடும் சிறுபொழுதில்

என் மனம் சுமந்த குழபங்களை

உன்னிடம் நீ எடுத்துக்கொள்ள

நிம்மதியாய் உறங்கி போகிறேன்...

உன் பேச்சால்

பலரை

உன் வசம் நீ கொண்டிருந்தாலும்,

ஒரு பார்வையில்

என்னையும் அறியாமல்

உன்னிடம் தோர்ப்பவல்

நான் மட்டுமே....

அப்பா

ஆயிரம் சந்தோஷங்களை

பரிசாக தரும் உன்னை

கண்ணீர் சிந்தவைத்த சில பொழுதுகளுக்காக

இன்றும் வருந்துகிறேன்....

ஆசை மகளாய் எனை வளர்த்த நீ

ஆயிரம் இன்னல்கள் என்னால் அடைந்தாலும்

பாசத்துடன் இன்னும் எனை அணைக்கிறாய்...

உன்னை ஒவ்வொரு நொடியும் ரசித்து

உன்னால் என்றும் பெருமைப்படும்

உன் அன்பு மகளாய்

பல வருடங்கள் நான் இருக்க

கடவுளை வேண்டுகிறேன்....

- சிந்து...

No comments: