Sunday, May 4, 2008

அப்பா அம்மாவிற்கு...




பிரிந்தால் புரியும் என்றார்கள்
அவர்கள் அன்பு...
அருகில் இருந்து பெற்ற அரவணைப்புகள்
விலங்காக தோன்ற
விடை பெற்று வெளியேறினேன்
சந்தோஷங்களுடன்...
மெல்ல புரிந்தது..,
நான் நினைத்து வந்த உலகம்
என் கண்ணீரை எதிர்பார்த்து இருந்ததென்று...
அழகாய் வடிவமைத்து..,
ஆசையாய் கையில் கொடுத்ததை..,
தெரிந்தே தவற விட்டு...,
இன்று புரிந்தபின் ஏங்குகிறேன்...
அம்மா வின் அன்பிற்காக...
அப்பா வின் பாசத்திற்காக...
விலங்குகளாக இருந்தாலும்
பூக்களாலயே இருந்தது...
வேலிகளாக இருந்தாலும்
என் விருப்பங்களை கொண்டே இருந்தது...
உடைத்து விட்டு வந்த விலங்குகள்
விருபங்களையும் கலைத்தெரிய...
வேலிகள் தாண்டி வந்து
வேதனையில் மனம் நிறைய...
சொல்ல வார்த்தைகள் இன்றி
கண்ணீருடன் எழுதுகிறேன்...,
நான் பிரிந்து தவிக்கும்
என் அப்பா அம்மா விற்கு....

- சிந்து...

No comments: