Friday, July 18, 2008

சிறு சிறு முத்துக்கள் ...





















**நிகழ்வுகளில் காயப்படுத்தினாய் ....



நினைவுகள் ரணமாக சேர்ந்தது ...










** மரணம் கூட



ரணம் தான் என்று



தன்னை உணர்த்த மறக்கவில்லை ...



காதல் மட்டும் ஏன் மறந்தது ...?










**நேசித்த நாட்களோ



நினைவுகளாய் என் மனதில் ...



காயப்பட்ட நொடிகளோ



சுவடுகளாய் என் நெஞ்சில் ...



நினைவுகள் மறைய போவதும் இல்லை ...



சுவடுகள் அழிய போவதும் இல்லை ...



மகிழ்ச்சியுடன் கண்ணீரும் சிந்தியது என் மனம் ...!










**உறங்கும் வரை உன் நினைப்புதான் ...



ஆனால் உறங்கிய பின்



நீயும் இல்லை



அட , கனவும் இல்லை ...



விழித்த நொடியில் உன் நினைப்புதான் ...



என்னுள் சுகந்தமாய்



என்றும் நீயடா ...!









**காதலில் இருந்தால்



செலவிட கற்றுக்கொள்ளுங்கள் ...



காதலுடன் சேர்த்து கண்ணீரையும் ...!





-சிந்து...












No comments: