Saturday, August 9, 2008

என் செல்ல குட்டி ...
















ரோஜா பூ இதழ்கலடி ...
பௌர்ணமியாய் கண்களடி ...
பிஞ்சு விரலால் நீ பிடிக்க
மனம்
மெல்லிசையாய் இசைக்குதடி ...

முட்டி போட பழகவில்லை ...
தத்தி தத்தி பேசவில்லை ...
தவழ நீயும் வேண்டாமடி
உன்
பவழ பாதம் நோகுமடி ...

பிஞ்சு பாதத்தில் நீ மிதிப்பாய் ...
பிரியமுடன் நீ சிரிப்பாய் ...
கோடி கண்கள் வேண்டுமடி
உன்
சிரிப்பும் எனக்கு சிறைதானடி ...

உற்சவத்தில் நீ இருக்க ...
உற்சாகத்தில் உன் மனம் சிரிக்க ...
தூக்கி வைத்து இருப்பேனடி
உனக்கு
தூளியாய் கைகள் மாறுமடி ...

பிஞ்சு குழந்தை சிணுங்கலெல்லாம் ...
பிணைந்து கிடக்கும் உறவிற்காக ...
யாருக்கு இங்கே தெரியுமடி
உன்
அழுகையில் அன்பு கூடுமடி ...

அழுகாமல் நீ இருந்தால் ...
அமைதியாக வீடிருந்தால் ...
தேவதை வீட்டினுள் இருக்குதென்று


அட


தெய்வத்திற்கு எப்படி தெரியுமடி ...?!




- சிந்து ...

Thursday, August 7, 2008

குட்டி குட்டி ...

























*** சண்டைகள் வேண்டுமடா நமக்குள் ...
ஒரு சின்ன சிணுங்களில்

நீ

சமாதானம் அடைவதை


ரசிக்க ...




*** கவிதையாக காதல் செய்ய



கவிஞன் ஆக வேண்டாம்



காதலனாகி பார் ...



உன்னவளின் கண்ப்பார்வை



உன்னை



கவிஞனாக்கி விடும் ...












*** உன்னை பற்றி



கவிதை எழுத யோசிக்கிறேன் ...



உன் பெயரை தவிர



வேறொன்றும் தோன்றவில்லை ...









*** கண் இரண்டில்




இமைகள் வேண்டாம்




கள்வனே ...




உன்னை




கண் சிமிட்டும் நொடியில் கூட




மறைக்க மறுக்கிறேன் ...







*** கவிதைகளில்




வாழ்க்கையை உணர்த்தலாம் ...




ஆனால்




என் வாழ்க்கையை கவிதையாக மாற்ற




உன்னால் மட்டுமே முடியும் ...







*** உன்னை பற்றி தெரிந்த எனக்கு




என்னை பற்றி தெரியவில்லையடா ...




உன் அளவிற்கு ...







*** நிலவாக நீ இருந்தால்




ஒரு நாளில் தேய்ந்திடுவாய் ...




கனவாக நீ இருந்தால்




காலை பொழுதில் கலைந்திடுவாய் ...




மறையாமல் பார்த்து கொள்கிறேன்




என் மனமாக நீ இருந்தால் ...







*** உதிரமாக உன்னை கொண்டு




உன் ஓட்டத்தினால் உயிர் கொள்வதை விட




இறந்து விடுவேனடா




ஓடி கலைத்த உதிரமெல்லாம்




உறைந்து போய் என்னுடன் சேர ...







- சிந்து ...

Tuesday, August 5, 2008

சிதறல்கள் ...














*** கண்கள் முழுதும் காதல் கொண்டு


கண் இமை மூடி மறைத்து வந்தேன் ...


கண்கள் திறந்து நானும் பார்த்தால்


கலங்கி நீயும் போவாயடா ...


காதல் என்னும் வார்த்தை கொண்டு


நீ காயப்படுத்திய தழும்புகள் கண்டு ...






*** உன் நினைவுகளால்


கண்ணீர் சிந்தும் என் கண்களுக்கு


மருந்தாக சில முத்தங்களை தா ...


கண்ணீரெல்லாம் உறைந்து போகட்டும்


காதலாக ...


- சிந்து ...