Saturday, June 12, 2010

நாட்கள் நஹராமல்
ஒய்யாரமாய் நடை போட ...

நேரம் ஓடாமல்
சிரித்தபடி சிறை கிடக்க ...

நினைவோ நில்லாமல்
நினைத்த இடமெல்லாம் உலா செல்ல ...

சுற்றமும் நட்பும் அலங்கரிக்கும்
அழகான அரங்கேற்றத்துக்கு
காத்து கொண்டிருக்கிறது
நம் காதல் ...

- சிந்து . . .
என்னை கடக்கும்
நொடியில் மட்டும்
ஏக்கத்துடன் எட்டி பார்கிறது காதல் ...
என்னுள் இருக்கும்
உன் அருகில்
அதற்கும் கொஞ்சம் இடம் வேண்டுமாம் ...!!!

- சிந்து . . .
என்னை சுற்றி இருபவர்களுக்கு
நேரம் போதவில்லையாம் ...
யாரிடம் போய் சொல்வது ...
உனக்கும் எனக்கும் உள்ள இடைவெளியில்
அவை
ஊஞ்சலாடி கொண்டிருப்பதை ....?!

- சிந்து ...

Saturday, June 5, 2010


மாலை தென்றல்
தழுவி செல்ல
மயங்கி சரிந்தேன்
உன் நினைவுகளில் ...

இடிகள் வந்து
தூது சொல்லியும்
இயங்காமல் தொடர்ந்தேன்
என் கனவுகளில் ...

கர்வம் கொண்ட
கொட்டும் மழையோ
சாரல் தெளித்து
மீட்டு சென்றது 
நீ பேசும் வார்த்தைகளில்
வாழ்ந்து கொண்டிருந்த என்னை ... !

- சிந்து ...