Saturday, September 13, 2008

வலியும் ... வழியும் ...


காயப்படும் என்று தெரிந்தும்
காயப்படுத்தும் நண்பர்களுக்கு ...
மனதின் வலியை உணர்த்த
மௌனத்தின் வழியே சிறந்தது ...

- சிந்து ...

Monday, September 1, 2008

ஜெய் தம்பு ...








பஞ்சு மெத்தை மீதினிலே


பம்பரமாய் இருப்பவனே ...


துள்ளி விளையாடும் நேரத்திலே


தொட்டில் தேடும் மன்னவனே ...



கண்கள் இரண்டும் அழகாக


கர்வம் தீர்க்கும் விருந்தாக ...


உற்று பார்க்கும் பார்வையிலே


கவர்ந்து இழுத்து கொள்பவனே ...



ஓய்யாரமாய் தூளியிலே


அசைந்து கொண்டு நீ சிரிக்க ...


சலங்கை ஒலியும் சங்கீதமாய்


இசைக்க வைக்கும் மாயவனே ...



இறுக பிடிக்கும் உன் பிடியில்


உன் மெல்லிய மனம் புரிந்துவிடும் ...


விலகும் விருப்பம் என்றும் இல்லை


என் மனதையும் தந்தேன் சின்னவனே ...



சிந்து ...