Sunday, May 25, 2008

தங்க குட்டி லக்க்ஷிக்கு ...




பிறந்த உன்னை காண
பல தூரம் பயணம் செய்தேன்
கற்பனையில் உன்னை சுமந்தபடி ...

பட்டு போன்ற உன் மேனியை
தொட்டு ரசித்து கொண்டிருந்த தருணத்தில்
என் ஸ்பரிசத்தின் வாசத்தை
சுவாசமாய் உட்கொண்டாயோ தங்கமே ...

காரணமில்லா அழுகையையும்
என் கரம் பற்ற
அமைதிக்கொண்டாய் ...

அலைகள் போல நீ தவழ
உன்
புரியா மொழியையும்
மொழி பெயர்த்து இன்பம் கொண்டேன் ...

நீ தவழ்ந்ததை ரசித்தவள்
நீ நடந்ததை கண்டு
வியந்தே போனேன் ...

படிப்படியான வளர்ச்சிகள்
எல்லா குழந்தைகளுக்கும் நிகழ்வதுதான்
என்றாலும்
நீ தழைக்கும் ஒவ்வொரு அடியையும்
வியப்புடன் ரசித்தேன் கண்ணே ...

இன்று
சிறு பிள்ளையாய்
பள்ளி செல்லும் உன்னை பார்த்து
அழகாய் சிரிக்கிறாய் என்று
பல மணி நேரம் ரசிக்கும் என்னை
பைத்தியக்காரி என்பாயா
அல்ல
பாசக்காரி என்பாயா...?

லக்க்ஷி ...
பள்ளிக்காலம் விட்டு
பருவக்காலம் தொட்டாலும்
உன் சின்னஞ்சிறு அசைவுகளுக்கு
என்றும்
ஒரு ரசிகை நானடி ...

- சிந்து ...

Sunday, May 11, 2008

அம்மா ...


விசித்திரமானவள் நீ ...

உன்னை சித்திரமாய் வண்ணம் தீட்ட

வார்த்தைகளால் கோலமிடுகிறேன் ...

அழகாய்

நீ இருக்க ...

அமுதாய்

உன்

பேச்சு இனிக்க...

அன்பான கவனிப்பால்

உன் வசம் தான் ஆயிரம் பேர் ...

தென்றலை விட

மென்மையாய் நீ பேச

சிப்பியும் அறியா முத்தாய்

உனக்குள் என்னை தொலைத்தேன் ...

சுகங்களை நீக்கி

சுமைகளை தாங்கி

துயரங்கள் பல உன்னை வருடினாலும்

புயலுக்கு பின் மலர்ந்த பூப்போல்

புன்னகையுடன்

பூக்கிறாய்

ஒவ்வொரு விடியலிலும் ...

நிழல் என நீ இருக்க

இருள் என நினைத்து நான் விலக

சற்றும் சலிக்காமல்

நிழலாகவே இன்றும் என்னை தொடர்கிறாய் ...

ஆசையாய் அருகில் வந்து

பாசமாய் கட்டித்தழுவி

உன் மேல் முகம் புதைத்து

என் கண்கள் நீர் சிந்தாவிட்டாலும்

எனக்கென நீ கசிந்த துளிகளில்

உன்

பாசத்தின் விலையை

நான் அறிந்தேன் ...

அம்மா

கடல் போல நீ

உன் மேல்

கட்டு மரமாய்

பயமறியாமல்

பயணம் செய்கிறேன் ...

அன்பான தந்தையும்

பாசமான தம்பியும்

என்னைப்போல் உன்னில் இருக்க

சந்தோஷப்பயணம் செய்வாய்

வாழ்க்கை பாதையில் ...

உன் உணர்வுகளுக்கு பின்

என்றும்

நாங்கள் தொடர்வோம் ...

- சிந்து...

Tuesday, May 6, 2008

அப்பா...

அப்பா...

உன்னை நான் எதனுடன் ஒப்பிடுவது....

ஆயிரம் மலர்களுடனா...?

இல்லை

அழகான வானவில்லுடானா...?

மலர்களின் வாசத்தை விட

உன் பாசம் மனம் வீச...

வானவில்லின் வண்ணங்களை விட

உன் எண்ணம் நிறம் சூட்ட

அன்பான அப்பா என்று உன்னை சொல்ல

வார்த்தைகளை தேடி

இன்னும் அலைகிறேன்...

தோல் குடுக்கும் தோழனாய்

நீ இருக்க ,

உன் மேல் தலை சாயும் , ஒரு நொடியில்

நீ பாசத்துடன் தலை வருடும் சிறுபொழுதில்

என் மனம் சுமந்த குழபங்களை

உன்னிடம் நீ எடுத்துக்கொள்ள

நிம்மதியாய் உறங்கி போகிறேன்...

உன் பேச்சால்

பலரை

உன் வசம் நீ கொண்டிருந்தாலும்,

ஒரு பார்வையில்

என்னையும் அறியாமல்

உன்னிடம் தோர்ப்பவல்

நான் மட்டுமே....

அப்பா

ஆயிரம் சந்தோஷங்களை

பரிசாக தரும் உன்னை

கண்ணீர் சிந்தவைத்த சில பொழுதுகளுக்காக

இன்றும் வருந்துகிறேன்....

ஆசை மகளாய் எனை வளர்த்த நீ

ஆயிரம் இன்னல்கள் என்னால் அடைந்தாலும்

பாசத்துடன் இன்னும் எனை அணைக்கிறாய்...

உன்னை ஒவ்வொரு நொடியும் ரசித்து

உன்னால் என்றும் பெருமைப்படும்

உன் அன்பு மகளாய்

பல வருடங்கள் நான் இருக்க

கடவுளை வேண்டுகிறேன்....

- சிந்து...

Monday, May 5, 2008

அண்ணா...

இல்லை என்று நினைத்த

உறவின் உருவமாய் ...

சுகத்திலும் சோகத்திலும்

மறுக்க முடியா தோழனாய்....

கண்கள் குளமாக

சந்தோஷத்தில் மனம் நிறைய...

உறவின் உரிமையை உணரும் முன்னே

காரணமின்றி விட்டு சென்றான்...

கண்கள் மீண்டும் குளமாக

மனமோ உறவின் உணர்வை ஏங்க....

சிந்து...

Sunday, May 4, 2008

Life...


The frangnance of Love
From
The flower of Heart
Is
Just to Attract
Bees like Humans
To
Enjoy the honey like Life....

sindhu..

பெண் குழந்தை...

ப்ரம்மனின் வேலை அற்ற படைப்பு ...
பிறந்தவுடன் இறந்தது கல்லிப்பாலால்
பெண் குழந்தை...

சிந்து...

Love...


It's not "mind" but "thoughts"...
It's not "heart" but "feelings"...
It's not "words" but "silence"...
It's not "sorrow" but "pain"...
It's not "me" but "you"...
It's not "love" but "life"...

sindhu...

அப்பா அம்மாவிற்கு...




பிரிந்தால் புரியும் என்றார்கள்
அவர்கள் அன்பு...
அருகில் இருந்து பெற்ற அரவணைப்புகள்
விலங்காக தோன்ற
விடை பெற்று வெளியேறினேன்
சந்தோஷங்களுடன்...
மெல்ல புரிந்தது..,
நான் நினைத்து வந்த உலகம்
என் கண்ணீரை எதிர்பார்த்து இருந்ததென்று...
அழகாய் வடிவமைத்து..,
ஆசையாய் கையில் கொடுத்ததை..,
தெரிந்தே தவற விட்டு...,
இன்று புரிந்தபின் ஏங்குகிறேன்...
அம்மா வின் அன்பிற்காக...
அப்பா வின் பாசத்திற்காக...
விலங்குகளாக இருந்தாலும்
பூக்களாலயே இருந்தது...
வேலிகளாக இருந்தாலும்
என் விருப்பங்களை கொண்டே இருந்தது...
உடைத்து விட்டு வந்த விலங்குகள்
விருபங்களையும் கலைத்தெரிய...
வேலிகள் தாண்டி வந்து
வேதனையில் மனம் நிறைய...
சொல்ல வார்த்தைகள் இன்றி
கண்ணீருடன் எழுதுகிறேன்...,
நான் பிரிந்து தவிக்கும்
என் அப்பா அம்மா விற்கு....

- சிந்து...

நட்பு...

உன் அன்பை நான் கேட்டு...
என் மனதின் பதில் கேக்க...
மௌனமாய் நின்ற ஒரு நொடியில்...,
மெல்ல சிரித்து , குரல் கொடுத்தாய்...,
உனக்கு முன் ,
உன் மனம்
என்னிடம் வந்ததென்று...

சிந்து...

தோழிக்கு ...



எனக்கு முன் உன்னை படைத்தவன்...
உனக்கு துணையாய் என்னை படைத்தான்....
நம்மை இணைக்க நட்பை உருவாக்கி...
அறிமுகமாக ஒரு நொடியும் கணித்தான்...
சந்தித்த ஒரு நொடியில்
பல உறவுகளை மனம் அது உணர்த்த...
நம் நட்பின் ஆழம் சொல்ல
மொழி ஏதும் இல்லாமல்,
மௌனமாய் சிரித்தான்
பூஜை அறையில்...

சிந்து...

Saturday, May 3, 2008

To my Friend..


A love for "U"
is
A rose among lilies....
Waiting for "U"
is
A bud among roses...
Missing "U"
is
A thorn among buds...
But
Losing "U"
is
My heart among thorns...

sindhu...