Wednesday, September 23, 2009

தெரியவில்லையா ...???


என் கண்ணுக்குள் இருக்கும்
நீர் துளிக்கு கூட
உன்னை நான்
கண்களில் சுமப்பது தெரிந்திருக்கிறது ...
அதனால் தான்
சொல்லாமல் வெளியேறி கொண்டிருக்கிறது
உனக்காக
இன்றும் ...

-சிந்து...

Thursday, September 17, 2009

எனக்கு மட்டும் ...




மாலை நேர மழை சாரல்
மயங்க மனம் மறுக்குதடி ...
பெண்ணே ...
சற்று ஒதுங்கி நில் ...
உன் மேல் விழும்
துளிகள் அனைத்தும்
கர்வமாய் சிரிக்குதடி எனை பார்த்து ...

கருங்கூந்தல் மீது
பூச்சூட வேண்டாமடி ...
பெண்ணே ...
கொடி விட்டு உயிர் பிரிந்த
பூக்கள் அனைத்தும்
உன் கூந்தல் ஏறி கேலி செய்யுதடி எனை பார்த்து ...

உன் பாதம் இரண்டிலும்
மணி கொலுசு எதுகடி ...
பெண்ணே ...
உடன் இருக்கும் காரணத்தால்
ஏளனமாய் சினுங்குதடி
பின்தொடரும் எனை பார்த்து ...

என்னுள் நீயாய்
முழுவதுமாய் வந்திடடி ...
பெண்ணே ...
காற்றும் உன்னை தீண்ட
கள்வனாய் மாறுதடி இன்று ...

-சிந்து ...

Friday, September 11, 2009





தூங்கும்வரை காத்திருந்து ...
தூங்கிய பின் அருகில் வந்து ...
மிரிதுவான கைகளுக்குள்
விரல் வைத்து பார்கிறேன் ...
இறுக பிடித்து கொள்கிறாயடி ...
நினைவில்லா நேரத்திலும்
நிறைவோடு தொடரும்
நம் உறவை உணர்த்தும் விதமாக ...

-சிந்து ...

Thursday, September 10, 2009

அம்மு ...



என் பெயர் அழகென்றால்

யார் கூப்பிட்டாலும் இனித்திருக்க வேண்டும் ...

உன் பேச்சு அமுதென்றால்

யாரிடம் பேசினாலும்

இசைத்திருக்க வேண்டும் ...

மழலையாய் கொஞ்சி

என் பெயர் நீ சொல்ல ...

மழையாய் விழுகிறேன்

ஒவ்வொரு துளியிலும்

இன்பங்கள் சொட்ட ...

-சிந்து....



Monday, September 7, 2009

என்றும் நண்பர்கள் ...



பள்ளி காலம் ...
பால்ய சிநேகம் ...
விவரம் புரியா வயதில்
விரல் பிடித்து வளர்ந்த பந்தம் ...
காரணம் இல்லை ...
கட்டாயமும் இல்லை ...
காவியமாய் தொடர்கிறது இன்றும் ...
அதே நேசம் ...
விட்டு பிரியாமல் தடுக்கும்
எதோ ஒரு பாசம் ...
என்றோ புரியாமல் செய்த உதவிகள்
இன்று புரிந்ததும் கண்ணீராய் ...
அழகாய் தொடர்கிறது
அனைவரின் நினைவிலும்...

- சிந்து ...