Tuesday, July 22, 2008

சிந்திய சிந்தனைகள் ...















*** நினைப்பதற்குள்


நெஞ்சம் பூக்கிறது ...


ரசிப்பதற்குள்


புன்னகை பூக்கிறது ...


கண்கள் நிறைந்து


வழிந்து ஓட


கண்ணே அறிந்தேன்


இதுதான்


காதல் பெருக்கெடுப்பா ... !












*** அழகாய் சிந்தும் மழை சாரலில்


விளையாட துடிக்கும் மனம்


அடைமழை வந்தால்


ஒதுங்கி நிற்கவே சொல்கிறது ...


அதுபோலத்தான் அன்பும்


அளவாக இருக்கும் வரை


அழகாக இருக்கும் ...!








*** கண் கொண்ட கருவறையில்


காதல் உன்னை சுமந்திருந்தேன் ...


நீ


கண்ணீராய் வெளியேற


இமை கொண்டு மறுத்திருந்தேன் ...


தடுத்த இமைகள் ...


துடித்து விலக ...


களைந்து போனாயோ , கருவிலே ...!








- சிந்து ...


No comments: