Tuesday, July 22, 2008

சிந்திய சிந்தனைகள் ...















*** நினைப்பதற்குள்


நெஞ்சம் பூக்கிறது ...


ரசிப்பதற்குள்


புன்னகை பூக்கிறது ...


கண்கள் நிறைந்து


வழிந்து ஓட


கண்ணே அறிந்தேன்


இதுதான்


காதல் பெருக்கெடுப்பா ... !












*** அழகாய் சிந்தும் மழை சாரலில்


விளையாட துடிக்கும் மனம்


அடைமழை வந்தால்


ஒதுங்கி நிற்கவே சொல்கிறது ...


அதுபோலத்தான் அன்பும்


அளவாக இருக்கும் வரை


அழகாக இருக்கும் ...!








*** கண் கொண்ட கருவறையில்


காதல் உன்னை சுமந்திருந்தேன் ...


நீ


கண்ணீராய் வெளியேற


இமை கொண்டு மறுத்திருந்தேன் ...


தடுத்த இமைகள் ...


துடித்து விலக ...


களைந்து போனாயோ , கருவிலே ...!








- சிந்து ...


Friday, July 18, 2008

சிறு சிறு முத்துக்கள் ...





















**நிகழ்வுகளில் காயப்படுத்தினாய் ....



நினைவுகள் ரணமாக சேர்ந்தது ...










** மரணம் கூட



ரணம் தான் என்று



தன்னை உணர்த்த மறக்கவில்லை ...



காதல் மட்டும் ஏன் மறந்தது ...?










**நேசித்த நாட்களோ



நினைவுகளாய் என் மனதில் ...



காயப்பட்ட நொடிகளோ



சுவடுகளாய் என் நெஞ்சில் ...



நினைவுகள் மறைய போவதும் இல்லை ...



சுவடுகள் அழிய போவதும் இல்லை ...



மகிழ்ச்சியுடன் கண்ணீரும் சிந்தியது என் மனம் ...!










**உறங்கும் வரை உன் நினைப்புதான் ...



ஆனால் உறங்கிய பின்



நீயும் இல்லை



அட , கனவும் இல்லை ...



விழித்த நொடியில் உன் நினைப்புதான் ...



என்னுள் சுகந்தமாய்



என்றும் நீயடா ...!









**காதலில் இருந்தால்



செலவிட கற்றுக்கொள்ளுங்கள் ...



காதலுடன் சேர்த்து கண்ணீரையும் ...!





-சிந்து...