Friday, June 13, 2008

என் சந்தோஷங்கள் ...












வானவில்லாய் தோன்றுகிறது


என் சந்தோஷங்கள் ...




நிறமுற்றது என்று நினைத்தீர்களா


இல்லை


தோன்றிய சில வினாடிகளில்


நிறத்தின் சுவடுகள் கூட இல்லாமல்


மறைக்கிறது ...




திகட்டும் அளவிற்கு பாசம் ...


திணறும் அளவிற்கு சந்தோஷம் ...


திரும்பும் இடமெல்லாம்


இறைந்து கிடக்கும் இன்பம் ...


அள்ளிக்கொள்ள கைகள் நீட்டினாள்


அனைத்தும்


காணாமல் போகிறது


கானல் நீராய் ...




கேட்காமல் வாங்கி கொடுத்த பொம்மைகள்


விளையாடுவதர்க்குள்


திரும்ப பறித்து கொண்ட போது


ஏமாந்து நிற்கும் குழந்தைகளின் கண்ணீர்


ஏக்கங்கள் நிறைந்திருக்கும் ...


என் கண்ணீர் கூட அப்படித்தான்


பொம்மையை இருக்கிறது பாசம் ...




சிறுபிள்ளையாய் இருந்தது முதல்


இன்றுவரை


பல முறை ஏமாந்து கொண்டிருக்கிறேன்


நொடியில் காணமல் போகும்


இந்த பாசத்தினால் ....



-சிந்து ...




















No comments: