Saturday, August 9, 2008

என் செல்ல குட்டி ...
















ரோஜா பூ இதழ்கலடி ...
பௌர்ணமியாய் கண்களடி ...
பிஞ்சு விரலால் நீ பிடிக்க
மனம்
மெல்லிசையாய் இசைக்குதடி ...

முட்டி போட பழகவில்லை ...
தத்தி தத்தி பேசவில்லை ...
தவழ நீயும் வேண்டாமடி
உன்
பவழ பாதம் நோகுமடி ...

பிஞ்சு பாதத்தில் நீ மிதிப்பாய் ...
பிரியமுடன் நீ சிரிப்பாய் ...
கோடி கண்கள் வேண்டுமடி
உன்
சிரிப்பும் எனக்கு சிறைதானடி ...

உற்சவத்தில் நீ இருக்க ...
உற்சாகத்தில் உன் மனம் சிரிக்க ...
தூக்கி வைத்து இருப்பேனடி
உனக்கு
தூளியாய் கைகள் மாறுமடி ...

பிஞ்சு குழந்தை சிணுங்கலெல்லாம் ...
பிணைந்து கிடக்கும் உறவிற்காக ...
யாருக்கு இங்கே தெரியுமடி
உன்
அழுகையில் அன்பு கூடுமடி ...

அழுகாமல் நீ இருந்தால் ...
அமைதியாக வீடிருந்தால் ...
தேவதை வீட்டினுள் இருக்குதென்று


அட


தெய்வத்திற்கு எப்படி தெரியுமடி ...?!




- சிந்து ...

No comments: