Saturday, June 12, 2010

நாட்கள் நஹராமல்
ஒய்யாரமாய் நடை போட ...

நேரம் ஓடாமல்
சிரித்தபடி சிறை கிடக்க ...

நினைவோ நில்லாமல்
நினைத்த இடமெல்லாம் உலா செல்ல ...

சுற்றமும் நட்பும் அலங்கரிக்கும்
அழகான அரங்கேற்றத்துக்கு
காத்து கொண்டிருக்கிறது
நம் காதல் ...

- சிந்து . . .

1 comment:

ஆயில்யன் said...

முன்பு எப்போதோ படித்த “அம்மா” கவிதையின் ஞாபகத்தில் மீண்டும் வந்தேன் இங்கு!


நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடர்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!