Saturday, June 5, 2010


மாலை தென்றல்
தழுவி செல்ல
மயங்கி சரிந்தேன்
உன் நினைவுகளில் ...

இடிகள் வந்து
தூது சொல்லியும்
இயங்காமல் தொடர்ந்தேன்
என் கனவுகளில் ...

கர்வம் கொண்ட
கொட்டும் மழையோ
சாரல் தெளித்து
மீட்டு சென்றது 
நீ பேசும் வார்த்தைகளில்
வாழ்ந்து கொண்டிருந்த என்னை ... !

- சிந்து ...