

*** நினைப்பதற்குள் நெஞ்சம் பூக்கிறது ... ரசிப்பதற்குள் புன்னகை பூக்கிறது ... கண்கள் நிறைந்து வழிந்து ஓட கண்ணே அறிந்தேன் இதுதான் காதல் பெருக்கெடுப்பா ... ! *** அழகாய் சிந்தும் மழை சாரலில் விளையாட துடிக்கும் மனம் அடைமழை வந்தால் ஒதுங்கி நிற்கவே சொல்கிறது ... அதுபோலத்தான் அன்பும் அளவாக இருக்கும் வரை அழகாக இருக்கும் ...! *** கண் கொண்ட கருவறையில் காதல் உன்னை சுமந்திருந்தேன் ... நீ கண்ணீராய் வெளியேற இமை கொண்டு மறுத்திருந்தேன் ... தடுத்த இமைகள் ... துடித்து விலக ... களைந்து போனாயோ , கருவிலே ...! - சிந்து ... |